பேருந்தில், காவல்துறை அதிகாரியின் அநாகரிக செயல் – சுற்றி வளைத்து தாக்கிய பயணிகள்! SamugamMedia

பேருந்தில் பயணித்த யுவதியின் மார்பகத்தை தொட்ட குற்றச்சாட்டில் பிரதான காவல்துறை பரிசோதகர் ஒருவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட காவல் நிலையமொன்றின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் 54 வயதுடைய பிரதான காவல்துறை பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த பேருந்தில் பயணித்த பயிற்சி தாதி ஒருவர் அருகில் நின்றிருந்ததாகவும், பிரதான காவல்துறை பரிசோதகர் அவரது மார்புப் பகுதியைத் தொட்டதாகவும்,இந்த சம்பவத்தை பயிற்சி தாதி பேருந்தில் கூறியதாகவும் இதனையடுத்து பயணிகள் தலைமைப் பரிசோதகரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அளுத்கம நிலைய பிரதான பரிசோதகர் ஏ.எம். பிரியன்ன குமாரவின் பணிப்புரையின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *