அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் விசேட கோரிக்கை – மின்சார கட்டண அதிகரிப்பால் பாதிப்பு! SamugamMedia

நாட்டில் மின்சார கட்டணங்களின் அதிகரிப்பு மற்றும் அரிசி ஆலையின் உதிரி பாகங்களின் இரட்டிப்பான விலையேற்றம் காரணமாக அரிசி ஆலைகளை தொடர்ந்து இயக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அரிசி ஆலைகள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்குவதனால் மின்சார கட்டண அதிகரிப்பினை தாங்கி கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றனர்.

எனவே அரசாங்கம் இதற்கு ஒரு சரியான தீர்வை பெற்றுதர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் நெல் குற்றுவதற்கான கட்டணங்களை அதிகரிக்கவேண்டி ஏற்படும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *