
பதுளை-வேவெஸ்ச பெருந்தோட்ட தெபெத்த தோட்ட பிரிவிலுள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெபத்தை தோட்ட பிரிவைச் சேர்ந்த இலட்சுமணன் சந்திரலேகா எனும் 58 வயதான பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேயிலைத் தோட்டத்தில் பெண்ணின் சடலம் காணப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக பதுளை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.