யாழ்.மாநகரசபை கலையாது, முதல்வர் தெரிவு நடக்கும்! துறைசார் அதிகாரிகள் தகவல் SamugamMedia

தொடர்ச்சியாக யாழ் மாநகர சபை முதல்வர்கள் முன்வைத்த வரவு செலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டாலும் சபை கலையாது புதிய முதல்வர் தெரிவு இடம்பெறுமென துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாதாரணமாக இரு தடவைகள் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் முதல்வர் பதவியிழப்பதுடன் புதிய முதல்வரின் கீழும் இரு தடவைகள் பாதீடு தோற்கடிக்கப்பட்டால் சபை கலையும் என்பதே சட்ட ஏற்பாடு.

என்ற போதிலும் அது சபையில் ஏதாவது ஒரு கட்சி அல்லது சுயேட்சைக்குழு சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு அதிகமாகஇருந்தால் மாத்திரமே பொருந்தும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்த விடயம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் கடந்த தடவை அரச சட்டவாதி கூட சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கு அமைவாக உள்ளூராட்சி ஆணையாளரால் புதிய முதல்வர் தெரிவுக்கான வர்த்தகமானி ஊடாக விரைவில் அறிவிக்கப்படுமெனத் தெரிய வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *