எதிர்வரும் 8ஆம் திகதி முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தம்: அரசை எச்சரித்த தொழிற்சங்கங்கள்.! SamugamMedia

49 தொற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து இன்று நாட்டை முடக்கியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நடவடிக்கை அரசாங்கத்திற்கான முன் எச்சரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நியாயமற்ற வரிச்சுமைக்கு எதிராகவே தாம் போராடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான போரட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இது கவலைக்குரிய விடயமாக இருந்தாலும் தங்களால் எடுக்கப்படும் அதியுச்ச நடவடிக்கை 8 ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சதானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *