கோப்ரா கோல்ட் இராணுவப் பயிற்சியில் பார்வையாளர் நாடாக இலங்கை! SamugamMedia

அமெரிக்காவும், தாய்லாந்தும் இணைந்து ஆரம்பித்துள்ள கோப்ரா கோல்ட் என்ற வருடாந்த இராணுவப் பயிற்சியில் இலங்கை பார்வையாளர் நாடாக பங்கேற்றுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயிற்சியில், சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

3 ஆயிரத்து 800 இற்கும் அதிகமான அமெரிக்க மற்றும் 3000 தாய்லாந்து துருப்பினர்கள் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, பாகிஸ்தான், ஜேர்மனி, சுவீடன், குவைட் உள்ளிட்ட நாடுகள் பார்வையாளர் நாடுகளாக இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *