யாழ்.நீர்வேலியிலிருந்து கற்றாளை பானத்தை கொழும்பிற்கு ஏற்றுமதி செய்து வந்த பெண்ணின் நிலை!

வடக்கு கிழக்கிலுள்ள சிறு தொழல் முயற்சியாளர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமான பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் உற்பத்தியாளர்களை விடவும் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு தொழில் முயற்சியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கற்றாளை பானம் தயாரித்து கடந்த 10 வருடங்களாக இந்த தொழிலை செய்து வருவதாகவும் ஆனால் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கடந்த காலத்தில் யாழ்ப்பாணம் நீர்வேலியிலிருந்து கொழுமபிற்கு கூட கற்றாளை பானத்தை தயாரித்து ஏற்றுமதி செய்திருந்ததாகவும் ஆனால் தற்போது அவ்வாறு செய்யமுடியாமல் போயுள்ளதாக குறிப்பிடுகின்றார்.

தோட்டத்தில் உற்பத்திய செய்யப்பட்டுள்ள கற்றாளைகள் தேங்கி கிடப்பதாகவும் நாட்டின் பொருளாதார பின்னடைவினால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த கற்றாளைகளை வேறு வழிகளில் உற்பத்தி பொருட்களாக மாற்றுவதற்கு இயந்திரங்கள் தேவைப்படுவதாகவும் ஆனால் தற்போது இதற்கான இயந்திரங்களின் விலைகள் பல மடங்கு அதிகிரித்துள்ளதாக குறிப்பிடுகின்றார்.

அத்துடன் மின்சார கட்டண அதிகரிப்பு காரணமாகவும் தமது உற்பத்தியை முன்னெடுக்க முடியாத பிரச்சனையும் உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த தொழில், மேற்கொண்டு முன்னெடுக்க முடியாது உள்ளதாகவும் இந்த தொழிலை கைவிடவும் தனக்கு மனமில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *