தேர்தல் விவகாரம் – நாடாளுமன்றில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்துவதற்கு தீர்மானம்.!SamugamMedia

நாடாளுமன்றத்தில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவினர் இன்று தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற விவகாரக் குழுவில் இரண்டு நாள் விவாதம் கோரினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் நாட்டில் பலத்த எதிர்ப்பு நிலவி வருவதால், இது தொடர்பில் பரந்துபட்ட விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் சபை ஒத்திவைப்பின் போது இது விவாதமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியிருந்தையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *