
கொழும்பு, ஜனவரி 29:
பாணந்துறையில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவனின் பெற்றோரிடம் இருந்து லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மூத்த அதிகாரி கூறியது:
பாணந்துறையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றின் அதிபர், தரம் 1 வகுப்புக்கு மாணவர் ஒருவரைச் சேர்க்க ரூ. 150,000 லஞ்சம் தருமாறு, அந்த மாணவனின் பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மாணவனின் பெற்றோர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, மாணவனின் பெற்றோர் குறிப்பிட்ட அதிபரிடம் ரூ.150,000 பணத்தை வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அந்த அதிபரை கைது செய்தனர்.
இவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.