புதிய தொலைக்காட்சி அலைவரிசையை தொடங்கும் பல்கலைக்கழகம்

கொழும்பு, ஜனவரி 29:

இலங்கையில் உள்ள விஷுவல் மற்றும் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம் புதிய தொலைக்காட்சி அலைவரிசையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

‘வாபா டெலிவிஷன்’ என பெயரிடப்படுள்ள இந்த சேனல் வரும் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இலங்கையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றினால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி சேவை இதுவாகும்.

பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் பியோ டிவி சேனல் 123 இல் காலை 09.15 மணி தொடக்கம் ‘வாபா டெலிவிஷன்’ ஒளிபரப்பப்படும் என்று அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *