பொரளை தேவாலயம் உள்பட மேலும் இரண்டு இடங்களில் கைக்குண்டு வைத்த மருத்துவர்: காவல்துறை தகவல்

கொழும்பு, ஜனவரி 29:

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் அண்மையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்ட மருத்துவர் மேலும் இரண்டு இடங்களில் கைக்குண்டு வைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் கொழும்பில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

பொரளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற வைத்தியர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். விசாரணையின் போது, நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை, தெஹிவளை பெல்லன்வில ஆலயத்திலும் கைக்குண்டு வைத்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இவர் என்ன உள்நோக்கத்துடன் இந்தக் குன்டுகளை வைத்தார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *