
கடந்த காலங்களில் வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் மற்றும் கலிங்க மாகா செய்ததைப் போன்று அரசாங்கம் நாட்டின் விவசாய நாகரீகத்தை அழித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையற்ற செயற்பாடுகளே, தற்போதைய நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது.
அரசாங்கம் பொது மக்களை முடக்கி மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வெடிப்பு ஏற்படாது என உறுதியளித்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும், அதேவேளையில் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான வெடிப்புகளை பொதுமக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கும் உரக் கேன்களும் வெடித்து துர்நாற்றம் வீசுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களின் துயரத்தை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.