காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த வடமாகாண ஆளுநர்!

காணாமல்போனோரின் உறவுகள் மத்திய கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா போராட்டத்தில் ஈடுபட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது காணாமலாக்கப்பட்டோரின் விபரங்களை தன்னிடம் தருமாறு ஆளுநர் கூறியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் பல முறை நாங்கள் விபரங்களைக் கொடுத்துள்ளோம், இதுவரை எதுவும் நடக்கவில்லை என தெரிவித்தனர்.

இதனை அடுத்து ஆளுநர் அங்கிருந்து விலகிச் சென்றார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் அங்கு கூடியிருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, போராட்டக்காரர்கள் நிகழ்வு மண்டபத்திற்குள் செல்ல முற்படுகையில் பொலிசார் தடுத்து நிறுத்தியதுடன் அங்கு தள்ளு முள்ளு நிலை ஏற்பட்டதுடன் குழப்பமான நிலை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *