தமிழ்த் தேசிய வாழ்வுரிமைக் இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்

தமிழ்த் தேசிய வாழ்வுரிமைக் இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது

வடக்கு கிழக்க தமிழர் தாயக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்புக்களிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கின்றமை தொடர்பில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமைக் இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி புனித திரேசாள் மண்டபத்தில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமைக் இயக்கத்தின் தலைவர் சிவகரன் தலைமையில் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களிற்கு தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்க தமிழர் தாயக பகுதிகளில் நாளுக்கு நாள் நில ஆக்கிரமிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக நாங்கள் போராடவேண்டி உள்ளது.

அரசு நிலங்களை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவையாளர்களைக்கொண்டு அளவீடு செய்ய முற்படும்போது அந்த இடங்களில் மக்கள் கூடி எதிர்ப்பினை தெரிவித்தால் அதனை தடுத்து நிறுத்துகின்றனர்.

இனிவரும் காலங்களில் அரசுக்கு கால அவகாசங்களை வழங்குவதில்லை என்ற முடிவினையும் நாங்கள் எடுத்துள்ளோம்.

அதேபோ இந்த நிலஆக்கிரமிப்புக்களிற்கு எதிராககட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்புக்களை தெரிவிக்க வேண்டும்.

இன்றைய கலந்துரையாடலில் அதற்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது எனவும், அதற்கு மேலதிகமாக எதிர்வரும் 6ம் திகதி இது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு தீர்மானம் எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரன் ஆகியுாரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *