
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்பவர்கள் நீர்நிலைகளில் குளிக்கும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கி வருடாந்தம் 500 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் கடற்படைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியங்கர டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நீரில் மூழ்கிய 33 பேரை பொலிஸார் மீட்டனர்.
இந்த ஆண்டில் இதுவரை 20 இற்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஆறுகள் மற்றும் ஏரிகள் மற்றும் கடலில் நீராடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியங்கர டி சில்வா தெரிவித்துள்ளார்.