ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் பேராளர் மாநாடு!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்திற்கான பேராளர் மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஆசிரியர் அதிபர்களாய் ஒன்றிணைவோம் மற்றும் நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யோசப் ஸ்டாலின், வடக்கு மாகாண இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள், வடக்கு மாகாண அதிபர் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *