80 இலட்சம் பெறுமதியான கஜமுத்துக்களுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு – புல்லுமலையில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மகோயாவிலிருந்து புல்லுமலை பன்சலைக்கு முன்னால் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் குறித்த கஜமுத்துக்களை கடத்திக்கொண்டு, மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த வேளை வவுணதீவு விசேட அதிரடிப் படையினரும் கல்லடி கடற்படை வீரர்களும் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து 30.8 கிராம் மற்றும் 4.5 கிராம் எடையுள்ள இரு கஜமுத்துக்களும் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைதான இருவரும் ஏறாவூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ஹப்புத்தளையில் துப்பாக்கி சூடு: விசேட அதிரடிப்படை வீரர் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *