
தொழில் வாழ்க்கையில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய கடமை இளம் உத்தியோகத்தர்களுக்கு உண்டு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற விமானப்படை அதிகாரிகளின் வெளியேறும் அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மூன்றரை முதல் நான்கரை வருட காலப்பகுதியில் ஆறு பிரிவுகளின் கீழ் பயிற்சிகளை நிறைவு செய்த 153 கடெட் உத்தியோகத்தர்கள் இன்று சித்தியடைந்தனர்.
அதிகாரிகளின் நேர்மை மற்றும் ஒழுக்கத்தின் பெறுமதியை எடுத்துரைத்த ஜனாதிபதி, அது ஏனைய தரத்திலான அதிகாரிகள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.