சுழிபுரம் மேற்கு மீனவர்களின் வலைகள் இந்திய இழுவைப்படகுகளால் நாசம்!

யாழ்ப்பாணம் – சுழிபுரம் மேற்கு அலைமகள் கடற்றொழிற்சங்க மீனவர்களது வலைகளை இந்திய இழுவைப்படகுகள் சிக்குண்டு நாசமாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றிரவு நான்கு படகுகளில் மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர். அவர்கள் இன்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய இழுவைப் படகுகள் இலங்கை எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து அவர்களில் சிலரது வலைகளை சேதமாக்கியது.

இதன்போது, விரைந்து செயற்பட்ட மீனவர்கள், தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கையில் அகப்பட்ட வலைகளை எடுத்துக்கொண்டு கரைக்கு திரும்பினர்.

அண்மைக்காலமாக இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக வடக்கில் பல்வேறு இடங்களிலும், மீனவர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொழில் வாழ்க்கையில் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்! – ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *