
காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீரழிந்தது. அதேபோல தற்போதைய அரசாங்கம் விவசாய பாரம்பரியத்தை சீரழித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தம்புள்ளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு கிளர்ச்சி காலத்தில் பலன் தரக்கூடிய பல மரங்கள் அழிக்கப்பட்டதாகவும் காலிங்கன் யுகத்தில் இந்நாட்டின் வரலாற்று பாரம்பரியம் அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.