
சுமார் 400 இந்திய இழுவைப் படகுகள் காங்கேசன்துறையில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்து கொண்டிருப்பதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தின் சமாசனங்களின் தலைவர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதனால் எங்களுடைய மீனவர்கள் எவரும் தொழிலுக்குச் செல்லாமல் திரும்பி வந்துள்ளனர்.
இந்நிலைமை தொடருமாக இருந்தால், யாழ் மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பட்டினிச் சாவை நோக்கி, சாகவேண்டியதுதான் நிலைமை.
இதனை கடற்றொழில் அமைச்சரோ, ஜனாதிபதியோ, பிரதமரோ கவனம் எடுக்காமல் இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் கொடுத்த வாக்குறுதி தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
திருவிழா நடப்பதுபோல் சுமார் 400 படகுகள் வெளிச்சத்துடன் பருத்தித்துறை நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.