
கொழும்பு, ஜனவரி 29: எட்டம்பிட்டிய, ஜெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற 5 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளளார். மற்றையவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் “11 பேர் கொண்ட நண்பர்கள் குழு ஒன்று எட்டம்பிட்டிய, ஜெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் சனிக்கிழமை மதியம் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களில் 5 பேர் திடீரென பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி காணாமல் போனார்கள்.
காணாமல் போன 05 பேரில், நீரில் மூழ்கி உயிரிழந்த இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று சிறுமிகள், ஒரு சிறுவன் உள்பட காணாமல் போன நால்வரை தேடும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.