
கொழும்பு, ஜனவரி 29: மோசடிக் குற்றச்சாட்டில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட வர்த்தகர் ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வி.ஐ.பி. டெர்மினல் வழியாக செல்ல உதவிய இராஜாங்க அமைச்சரை ஜனாதிபதி கோட்டபாய பதவி நீக்கம் செய்யவுள்ளார் என்று லங்காதீப நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர், சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்வார் என்று லங்காதீப நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகர் இந்த அரசியல்வாதியின் ஊடாக பொலிஸில் சரணடைந்தார். இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தில் இருந்து பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று விமான நிலையம், விமான சேவைகள் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ. சந்திரசிறி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.