
யாழ்ப்பாணம், ஜனவரி 29: யாழ் நீதிமன்ற வளாகத்தில் ரூ. 180 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய உயர் நீதிமன்ற கட்டிடம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின், ‘சுபீட்சத்திற்கான தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கிணங்கவும், நீதியமைச்சின் ‘நீதிக்கான அணுகல்’ விசேட நடமாடும் சேவைக்கிணங்கவும் இந்த புதிய உயர் நீதிமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.