கொரோனா சமூகப் பரவல் நிலை காணப்படுகிறது: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

கொழும்பு, ஜனவரி 30: நாட்டில் கொரோனா சமூகப் பரவல் நிலை காணப்படுகிறது என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தைச் சேர்ந்த டாக்டர் ரஞ்சித் படுவன்துடாவா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுகாதார அதிகாரிகள் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக காதார மேம்பாட்டுப் பணியகத்தைச் சேர்ந்த டாக்டர் ரஞ்சித் படுவன்துடாவா கூறுகையில் “நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றில் சுமார் 95 சதவீதமானவை “ஓமிக்ரோன்” திரிபினால் ஏற்படுகின்றன. நாட்டில் கொரோனா சமூகப் பரவல் நிலை காணப்படுகிறது. மக்கள் இது தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் கொரோனா நோயாளிகளை வீட்டில் வைத்துப் பராமரிக்கும் திட்டத்தின் தலைவர் டாக்டர் மல்காந்தி கல்லகே கூறுகையில்

‘கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், அப்போது வீட்டுப் பராமரிப்பைப் பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கையை விட, தற்போது வீட்டில் வைத்துப் பராமரிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *