இன்று முதல் மீள திறக்கப்படுகிறது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

<!–

இன்று முதல் மீள திறக்கப்படுகிறது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! – Athavan News

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 90 ஆயிரம் மெட்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தைக் கடந்த தினத்தில் வந்தடைந்தது.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன, துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட மசகு எண்ணெய் தற்போது இறக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்ந்து செயற்படுமாயின் மின்சார உற்பத்திக்குத் தேவையான உலை எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை விநியோகிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *