25 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்துடன் ஐந்து பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு பணத்தினை கடத்திச்செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் ஐந்து பேர் சுங்கப்பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் டுபாய் செல்ல முற்பட்ட நிலையிலே நேற்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவின் பிரதி பணிப்பாளரும், ஊடகப்பேச்சாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தில் 95 ஆயிரம் அமெரிக்க டொலர், 18 ஆயிரம் யூரோ மற்றும் 37 ஆயிரம் சவுதி ரியால் என்பன காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *