மாடுகளை தாக்கும் இலம்பி நோய் – கிளிநொச்சியில் அதிகரிப்பு SamugamMedia

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு பெரியம்மை என்று சொல்லப்படுகின்ற இலம்பி நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. 

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் போன்ற பகுதிகளிலும் இதன் தாக்கத்தை அறிய முடிகிறது.

பூநகரி பகுதியில் இதன் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. 

எனவே இன்நோய்த்தாக்கம் காரணமாக உங்கள் பகுதிகளில் ஏதேனும் நோய்களுக்கான அறிகுறிகள்  தென்படுமாயில் அருகிள் உள்ள கால்நடை வைத்தியர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *