
சுழிபுரம் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவைமடிப்படகுகள் அத்துமீறி உள்நுழைந்து, இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான மீனவரின் வலைகளை சேதப்படுத்தியுள்ளன என்று அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் க.குலசிங்கம் தெரிவித்தார்.
‘சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் நேற்று கடலுக்குச் சென்று 8 மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமடி படகுகள், மீனவரின் வலைகள் அறுக்க முற்பட்டன.
எமது மீனவர்கள் விரைவாக தங்களது வலைகளை கடலில் இருந்து எடுத்து படகுகள் மூலம் கரைக்கு திரும்பினர். ஆனாலும், இந்திரன் கிருபானந்தன் எனும் மீனவரின் வலைகள் அறுத்தெறியப்பட்டுள்ளன’ என்று அவர் குறிப்பிட்டார்.