தம்புதேகமவில் சிறுமி மரணம்

கொழும்பு, ஜனவரி 30:

தம்புத்தேகமவில் ஆறு வயது சிறுமி கதவு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ” தாயுடன் தனக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு சிறுமி சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய் கதவை திறக்க முற்பட்ட போது திடீரென குழந்தை மீது வாயில் இடிந்து விழுந்துள்ளது.
குழந்தை மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *