
துருக்கி, பிரேசில், பிரிட்டன், ஸ்வீடன், ஸ்பெயின், செக் குடியரசு, மெக்ஸிகோ, எல் சால்வடோர், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கொரோனாத்தொற்றை சாதாரண காய்ச்சலாகக் கருத வேண்டும் எனக் கூறியுள்ளது.
இதற்கான சிறப்பு பரிசோதனைகள் மற்றும் கட்டாய தடுப்பூசி நடைமுறைகளை முற்றாக நீக்கியுள்ளன.
கொரோனா தொற்றை முற்றாக இல்லாது ஒழிப்பதற்கு புதிய வழிமுறை ஒன்றை ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் மேற்கொண்டு வந்த ஆய்வுகளின் விளைவாக கொரோனா தொற்று நுரையீரலில் மாத்திரம் அன்று தொண்டையிலும் முதல் வாரத்தில் அதிகளவில் பரவுகிறது என அறியப்பட்டிருந்தது.
எனவே தொண்டையில் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும் என ஜேர்மன் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதற்கு மிகவும் இலகுவான வழிமுறை ஒன்றை அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி தினமும் சில தடவைகள் உப்பு கலந்த சுடுநீரால் வாய் கொப்பளித்தல் அவசியம் எனக் கூறியுள்ளனர்.
இதன் மூலம் வைரஸ் பரவுவதற்கு ஏற்ற ph நிலை மாற்றம் அடைந்து தொண்டையில் அமில தன்மைக்கு பதிலாகக் காரத்தின் செறிவு அதிகரிக்கும் எனவும் வைரஸ் பரவுவது முற்றாகக் கட்டுப்படுத்தப்படும் எனவும் அவர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக வெளியே சென்று வீட்டிற்கு திரும்பியவுடன் மற்றும் காலையில் எழுந்தவுடனும் இவ்வாறு வாய் கொப்பளிப்பதன் மூலம் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இவ்வாறு அனைவரும் பின்பற்றினால் கொரோனா வைரஸ் விரைவிலேயே முற்றாக நீங்கி விடும் என கருதப்படுகிறது.