தமிழர்களை ஏமாற்றாதீர்கள்: யாழில் கவனயீர்ப்பு!

13 ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் முன்னணியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், அகில இலங்கை மக்கள் எழுட்சி கட்சி சார்பில் இருவர் யாழில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரமார் பொன்னம்பலத்துக்கு எதிராக ’13 வேண்டாம் என்றால் உங்கள் மாற்று தீர்வு என்ன’, அன்று உங்கள் தனித்து செயற்பட்டதால் தமிழ் மக்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் போனது’, சிங்கள தலைவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி தமிழ் மக்களும் தீர்வு கிடைக்காமல் செய்ய போறீர்களாக?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *