சுன்னாகத்தில் முன்பள்ளி மாணவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு

காரைநகரை பிறப்பிடமாக கொண்டு தற்போது லண்டனை வசிப்பிடமாக கொண்டவரின் நிதிப் பங்களிப்பில் சுன்னாகம் பகுதி முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் சுன்னாகம் ஐயனார் கோவில் மண்டபத்தில் இடம்பெற்றது.

லண்டனை பிறப்பிடமாகக் கொண்ட விக்னேஸ்வரனின் மூத்த புதல்வர் விக்னேஸ்வரன் சேயோனின் பிறந்த நாள் நினைவாக சுமார் 2 லட்சம் பெறுமதியான உதவிப் பொருட்கள் வலி. தெற்கு சுன்னாகம் பிரதேச சபைக்குட்பட்ட 43 முன்பள்ளிகளில் தெரிவு செய்யப்பட்ட 90 மாணவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வலி தெற்கு – சுன்னாகம் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் சுரேஷ்குமார் தலைமையில் இடம்பெற்ற உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில், சுன்னாகம் ஐயனார் கோயில் பிரதமகுரு சுன்னாகம் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *