நாவற்குழியில் விபத்து: தலை நசுங்கி பெண் பரிதாப பலி

யாழ். நாவற்குழி பகுதியில் சற்றுமுன் நடந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நொக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் ஏ-9 வீதி நாவற்குழி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.

அங்கு இறங்கிய பெண் வீதியோரமாக இருந்த மண் பிட்டியில் கால் வைத்த போது கால் தடுமாறி வீதியில் விழுந்துள்ளார்.

குறித்த பெண் வீதியில் விழுந்ததை கவனிக்காத குறித்த பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.

இதன்போது விதியில் விழுந்த பெண்ணின் தலை பேருந்தின் பின்பக்க சில்லில் நசிவுண்டது.

உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்ட பெண் பட்ட ரக வாகனத்தின் உதவியுடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்ததாக வைதியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *