பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரியில் பொருட்கள் இறக்குமதி : பந்துல குணரத்ன தகவல்

கொழும்பு, ஜனவரி 30:

அரிசி, சீமெந்து, மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெறுவதற்கு இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் குணவர்தன அண்மையில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கடன் வரி தொடர்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுடன் விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பந்துல குணவர்தன கூறுகையில் “பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து, பாசுமதி அரிசி மற்றும் மருந்துகள் இந்த ஆண்டு கடன் வரியியில் இறக்குமதி செய்யப்படவுள்ளன. கடன் வரியின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது மாநில வர்த்தக (பொது) கழகத்தால் மேற்கொள்ளப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *