ஜனவரி மாதத்தில் மட்டும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

ஜனவரி மாதத்திற்குள் மட்டும் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அத்கமைய, இம்மாதம் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரை 76 ஆயிரத்து 536 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதில் 12,368 பேர் ரஷ்யாவிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் போலந்து, மாலைத்தீவு மற்றும் கஸ்க்ஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *