
நான் அவுட், பொய்யன் என நிரூபித்தால் அடிமைச் சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி கொள்ள தயார் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
என்னை பற்றி சிலர் பொய்யான தகவல்களை பரப்பிக்கொண்டு திரிகின்றனர். அவர்களுக்கு என்னை பற்றியும் கட்சியை பற்றியும் சரியாக தெரியாது. உண்மையை இல்லாமல் செய்ய வேண்டும் என பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
அவர்களும் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள வேண்டும். என்னிடம் கோடி கோடியாக பணம் இல்லை. அலுவலகம் என்ற ஒரு கோடிப்பக்கமாகத் தான் இருக்கிறேன்.
நான் ஒரு வழக்கறிஞன், நொத்தாரிசும் கூட. இதில் நான் கோடி கோடியாக உழைக்க நினைத்திருந்தால் அன்றே செய்து இருப்பேன்.
இவை எல்லாவற்றையும் விடுத்து, மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்பதற்காக முன்னாள் தலைவர்கள் தந்தை செல்வா உள்ளிட்டோரின் வழியில் பயணிக்கின்றோம்.
நான் கோடி கோடியாக பணம், சொத்து வைத்திருக்கின்றேன் என்று யாரவது நிரூபித்தால், அடிமைச் சீட்டு எழுதி கொடுத்து விட்டு எல்லாவற்றிலும் இருந்து விலக தயாராக இருக்கிறேன்.
மேலும், பழைய கூட்டணியை உருவாக்கி விட்டு, பொறுப்புக்களை வழங்கிய பின்னரே நான் சாவேன். – என்றார்.
அரசாங்கத்தின் நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது: மாற்றத்துக்கு தயாராக வேண்டும்! – சுனில்