
வடகொரியா ஒரே மாதத்தில் ஏழாவது ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
புத்தாண்டு பிறந்தது முதல் வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.
ஆனாலும், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
ஒரே மாதத்தில் வடகொரியா நடத்தும் 7-வது சோதனை இதுவாகும்.
800 கி.மீட்டர் தொலைவில் இந்த ஏவுகணை பறந்து கடலில் விழுந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017- ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா சோதித்து பார்க்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை இதுவாகும் என சொல்லப்படுகிறது.
இதேவேளை, வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் மோதல் உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.