ஆஸியில் இலங்கையர் வீட்டில் குழந்தைகள் கொலை; தந்தை தற்கொலை!

மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்திக்க குணதிலக (வயது – 40) என்பவரும், மகன் கோஹன் (வயது – 6), மகள் லில்லி (வயது – 4) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர் தனது குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என ஆஸ்திரேலியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார். பிள்ளைகளை அவர்களது தாயாரிடம் (குணதிலகவின் முன்னாள் மனைவி) நேற்று காண்பிக்க வேண்டியிருந்தது.
தாயார் பிள்ளைகளைப் பார்க்க சென்றார். எனினும், அவர்கள் வரவில்லை. இதையடுத்து அவர் பொலிஸாருக்கு அறிவித்தார். இதனையடுத்து குறித்த கணவரின் வீட்டுக்கு விரைந்த பொலிஸார், அங்கு குழந்தைகளையும் தந்தையையும் சடலங்களாகவே மீட்டனர்.
மன உளைச்சல் காரணமாக தந்தை , இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குணதிலக டிசெம்பர் மாதம் 16ஆம் திகதி சமூக வளைத்தளத்தில் 18 நிமிட காணொலியொன்றைப் பதிவிட்டுள்ளார். தனக்குள்ள மன உளைச்சல் பிரச்சினைகள் தொடர்பில் அதில் கூறியுள்ளார். பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் தனது குழந்தைகள் இருவரதும் ஒளிப்படத்தை அவரது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *