பருத்தித்துறை பொலிசாரால் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிசாரால், பேதுறு முனை பிரதேசத்தில் இன்று சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஒழுங்குபடுத்தலில், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்தமால் கொட பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிரமதானப் பணியில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிசார் கலந்து கொண்டனர்.

குறித்த பகுதியில் மரங்களும் நாட்டி வைக்கப்பட்டன.

இம் மரக்கன்றுகளை பருத்தித்துறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்மால் கொட உட்பட பலரும் நாட்டி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *