
பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டடத்தில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் மாலை பம்பலப்பிட்டி, க்ரஸ்டர் பிளேஸில் கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்த விபத்தில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.