கம்பஹாவில் அநுர குமார திஸாநாயக்க மீது முட்டை தாக்குதல்?

கம்பஹாவில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தாக்குதலை அடுத்து, அவ்விடத்தில் அமைதியின்மை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றதையடுத்து, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் இருவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *