கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து – ஐவர் உயிரிழப்பு, அதிகளவானவர்கள் காயம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் கான்பூர் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்ததோடு பலரும் காயமடைந்துள்ளனர்.

டாட் மில் வீதியில் பயணித்த மின்சார பேருந்து ஒன்று திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

பல வீதிகள் ஒன்றுசேரும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த இந்த பேருந்து, பேருந்தில் நடந்து சென்றவர்கள் மீது ஏறியது.

இதனால், சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய கான்பூர் பொலிஸ் துணை ஆணையர் பிரமோத் குமார், “பேருந்து விபத்திற்கு பிறகு ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழப்புகளுடன் மூன்று கார்கள் மற்றும் பல இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருகிறோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *