கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அண்மைய வாரங்களில் கோவிட் தொற்று உறுதியாளர்கள் மற்றும் மரணங்களின் எணிணக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த வாரத்தில் பதிவான தொற்று உறுதியாளர் எண்ணிக்கையானது அதற்கு முன்னைய வாரத்தை விடவும் 15 முதல் 20 வீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் மரணங்களின் எண்ணிக்கையும் 5 முதல் 6 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் மாத்திரை பெற்றுக் கொண்டவர்களுக்கு நோய்த் தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சாத்தியங்கள் வெகு குறைவு என சுகாதார அமைச்சின் கோவிட் தொழில்நுட்ப பிரிவு பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *