இங்கிலாந்து…

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான ஐந்தாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 3-2 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றுள்ளது.

பார்படோஸ் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிய்ரன் பொலார்ட் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் ரொவ்மன் பவல் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அடில் ராஷித் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 195 ஓவர்கள் நிறைவில் 162 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேம்ஸ் வின்ஸ் 55 ஓட்டங்களையும் சேம் பிளிங்ஸ் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும் அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

குறிப்பாக போட்டியின் 19ஆவது ஓவரில் ஜேஸன் ஹோல்டர், தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் ஜேஸன் ஹோல்டர் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *