
அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்திற்கு ஜே.வி.பி.யின் உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஒருவர் இருப்பதாக சந்தேகநபர்கள் தெரிவித்ததாக மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
உள்ளூர் அதிகாரசபை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட கும்பல் குழு ஒன்று மாநாட்டு மண்டபத்தை நோக்கி முட்டைகளை வீசியது.
அவர்களில் இருவரை பிரதேசவாசிகள் மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பிடித்து நிட்டம்புவ பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் கடல்சார் பாதுகாப்பு துறையில் உள்ள பிரபல நிறுவனத்துடன் தமக்கு தொடர்பு இருப்பதாக சந்தேக நபர்கள் கூறியதாக ஜெயசிங்க கூறினார்.
மேலும் இத்தகைய தாக்குதல்கள் மூலம் தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை அரசாங்கத்தால் நிறுத்த முடியாது என மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.
Two war veterans who came to attack an NPP rally in Gampaha was apprehended. They said they were paid Rs. 5,000 for the job. This government came into power with the promise of taking care of the war veterans. Is this how they do that?#lka #SriLanka #Politics pic.twitter.com/vmHj2q68sN
— Prasad Welikumbura (@Welikumbura) January 30, 2022