வடக்கு உட்பட 14 புகையிரத சேவைகள் இரத்து!

சில புகையிரத மார்க்கங்களின் 14 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் இவ்வாறு புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பிரதான புகையிரத மார்க்கத்தின் 6 புகையிரத சேவைகளும், களனி வெளி மற்றும் கரையோர புகையிரத மார்க்கங்களின் தலா 2 புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் புத்தளம் புகையிரத மார்க்கத்தின் 3 சேவைகளும், வடக்கிற்கான ஒரு புகையிரத சேவையும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *