
தெஹல்கமுவ பிரதேசத்தில் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹல்கமுவ, இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொகரெல்ல – இறப்பர் தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் தனது மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் தலையில் இரும்பு கம்பியால் குத்தியே இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணைக் கொலை செய்த அவரது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்த சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.