
திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
19 வயதுடைய காண்டீபன் சஞ்சீவன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தாம் உறங்கிக் கொண்டிருந்த வேளை, தனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக இளைஞரின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரே, உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.