தங்க வீராங்கனைக்கு யாழில் பாராட்டு விழா!

சர்வதேச ரீதியில் இடம்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற முல்லைத்தீவு வீராங்கனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று கௌரவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வை.எம்.சி.எ மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செ.கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

வெற்றி பெற்ற வீராங்கனையான க.இந்துகாதேவியை சமூக மட்ட அமைப்புகள் பலவும் பாராட்டி கௌரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *